Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் தாக்கி 10 பேர் பலி...

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (13:19 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பீட் மாவட்டத்தில் உள்ள துர்கா தாலுக்காவில் சர்தாரி ககர்வாடா பகுதியில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
 
அதேபோல், மஜால்காவ் தாலுகாவில் மரத்தின் அடியே ஒதுங்கிய 55 வயது பெண்மணியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
 
மேலும், அதே பகுதியில் உள்ள ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர், ஒரு பெண் உட்பட 3 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். அதோடு, ஜல்னா மாவட்டத்தில் தொபடேஷ்வர் கிராமத்தை சேர்ந்த சந்திரபகா தபாடே(52) என்பதும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
 
தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments