Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் இணைப்பு முற்றிலும் ரத்தாகுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (06:23 IST)
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்பது மட்டுமின்றி அந்த ஆதார் அட்டையை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றது. சாதாரணமாக கிடைக்கும் சலுகைகள் கூட ஆதார் அட்டை இல்லாததால் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நேற்றைய விசாரணைக்கு பின்னர் ஆதார் இணைப்பது உண்மையில் அவசியமா? என்பது தொடர்பாக இன்று காலை 10.30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும்  ஆதார் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments