Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலிகாலம் நடக்குது போல… 500 ரூபாய்க்காக மனைவி கடத்தல்…

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (19:16 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் கொடுத்த கடனை திருப்பித் தராதவரின் மனைவியை கடத்தி சென்றவரால் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் வசித்து வருபவர் பசுவராஜ் இவருக்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும் , ஒரு குழந்தையும் உண்டு.

பசுவராஜ்  சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உக்கேரி என்பவரிடம் 500 ரூபாய் கடன் வங்கியிருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக பசுவராஜால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கடன் கொடுத்தவரான ரமேஷ் உக்கேரி வெறும் 500 ரூபாய் பணத்துக்காக பசுவராஜின் மனைவியை வீடு புகுந்து  சென்று கடத்தி சென்றிருக்கிறார்.
இந்த விஷயத்தை அறிந்து கொண்ட பசுவராஜ் வாங்கிய அப்பணத்தை  திருப்பி கொடுத்துவிட்டு தன் மனைவியை மீட்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.


ஆனால் ரமேஷ் உக்கேரி நான் உன் மனைவியை திருமணம் செய்து கொண்டேன் அதனால் அந்த பணம் எனக்கு வேண்டாம் என்று கூறியதுடன் உனது மனைவியை நானே வைத்துக்கொள்கிறேன் எனவும் கூறுயிருக்கிறார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பசுவராஜ் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு முதலில் அங்குள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றுள்ளார் ஆனால் இந்த விவகாரத்தைப் பற்றி காவல் துறை எதுவும் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. பின் மனம் அதிருப்தி அடந்த பசுவராஜ் மாவட்ட கலெக்டரின் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு தன் மனைவியை மீட்டுதர வேண்டுமென கேட்டு போராடிவருகிறார்.

இந்த கடத்தல் சம்பவம் பெல்கேவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments