Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்திலுள்ள இந்தியா

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:00 IST)
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் பசி மற்றும் பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா, பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 97வது இடத்திலிருந்து இந்த  ஆண்டு 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் இது தொடர்பாக 119 நாடுகளிலும் ஒரு ஆய்வை நடத்தியது. அதன் அறிக்கையில், இந்தியாவில் பசி மற்றும் பட்டினியால் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் உள்ளதாகவும், 5-இல் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் எடையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 29-வது இடத்திலும், நேபாளம் 72, மியான்மர் 77, இலங்கை 84, வங்கதேசம் 88-வது  இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 107-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 108-வது இடத்திலும் இருக்கின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் மட்டுமே இந்தியாவை காட்டிலும் பின்னால் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments