Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி துரைசாமியை தேடும் பணி 7 வது நாளாக நீட்டிப்பு.! நாளை டிஎன்ஏ பரிசோதனை முடிவு.!!

Senthil Velan
சனி, 10 பிப்ரவரி 2024 (16:46 IST)
இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது.
 
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.  அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. 
 
இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு 7வது நாளாக ஈடுபட்டுள்ளது. மேலும் வெற்றி துரைசாமியை  கண்டுபிடிக்க  இந்திய கடற்படை களமிறங்கியுள்ளது.

ALSO READ: அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. பா.ம.க..? எத்தனை தொகுதிகள்..!!
 
இந்நிலையில் கார் விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும். சட்லஜ் நதி அருகே கண்டறியப்பட்ட மூளை திசுக்களில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments