Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது'- மத்திய அமைச்சர் தகவல்

Authority to regulate online gambling
Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (17:20 IST)
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 'ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே  உள்ளது' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து வருகிறது. இதைத் தடை செய்ய வேண்டுமென ஆளும்கட்சியும், எதிர்க்கட்சி, சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஆன்லைன் தடை மசோதா கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இந்த மசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில்,. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது.

அப்போது,   பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மீண்டும் ஆன்லைன் தலை மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு  கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா குறித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,. ’ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நான்கு மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல ; ஆளுநரின் செயலை மத்திய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் ‘அவர் குற்றம் சாட்டினார்.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று திமுக எம்பி,, பார்த்திபன் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு,. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 'ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே  உள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும்,  மாநில அரசிற்கு அதிராமில்லை என்று கூறி தமிழக ஆளுனர் மசோதாவை திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments