Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வது நாளாக தொடரும் டெல்லி முதல்வரின் போராட்டம்: பெருகும் ஆதரவு

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (09:51 IST)
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் 5வது நாளாக இன்று ஆளுநர் இல்லத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு ஆளும் அரசு செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டி இருந்து வருகிறது. 
 
அரசின் திட்டங்களை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மறுக்கிறார்களாம். அதோடு, தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு பிறகு, அமைச்சர்களுடனான கூட்டத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். 
 
இதனால், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார்.
 
மேலும் ஆளுனரை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் கெஜிர்வால். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் டெல்லி துணை நிலை ஆளநர் அனில் பாய்ஜல் இல்லத்தின் விருந்தினர் அறையில் தொடர்ந்து 5வது நாளாக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்அளிக்காமல்சிரித்தபடி சென்ற சவுமியா அன்புமணி!

யாரைத் துணை முதல்வராக அமர வைப்பது என்பது குறித்து ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு- தொல்.திருமாவளவன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments