Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் காலில் விழுந்த பேராசிரியர்...

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (14:55 IST)
வட இந்தியாவிலுள்ள மத்திய பிரதேசத்தில் மாண்ட்சோர் பகுதியில் ஒரு வணிக கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர்  தினேஷ் குப்தா.
வழக்கம் போல இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது ’அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்’ அமைப்பினை சேர்ந்த மாணவர்கள்  நம் 'தேசத் தாய்க்கு 'வெற்றி முழக்கம் எழுப்பி உள்ளனர்.

இதனால் வகுப்பை விட்டு வெளியே வந்த பேராசிரியர் அம்மாணவர்களிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிகிறது.இதனால் கோபம் அடைந்த மணவர்கள்  காவல்துறையினரிடம் புகார் செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
 
இதனையடுத்து மாணவர்களின் மிரட்டலுக்கு அச்சமடைந்த பேராசிரியர் அந்த மணவர்களின் காலில் விழுந்துள்ளார். அதை வீடியோ எடுத்து ஒரு மாணவர் வெளியிட்டுள்ளார். 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments