Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் பேச்சில் விதி மீறல் இல்லை - தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 4 மே 2019 (13:36 IST)
மஹாராஸ்டிரா மாநிலம் நந்தேவாட் என்ற இடத்தில் கடந்த மாதம் 6 ஆம்தேதி பிரதமர் நரேந்தர மோடி பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதத்தில் ’நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிதான் வயநாடு’ என்று தொகுதியைக் குறிப்பிட்டு பேசினார். 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் அது நட்சத்திர தொகுதியானது. இந்நிலையில் பிரதமர் மோடி  தொகுதியை  குறிப்பிட்டு பேசியதாகக்கூறி  தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
 
இந்தப் புகாரை  விசாரித்த தேர்தல் ஆணையம்  பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தெரிவித்துள்ளது.தற்போது பிரதமர் மோடியின் மீதான 4 வது விதிமீறல் புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments