Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 லட்சம் பக்தர்கள்.. ரூ.120 கோடி உண்டியல் காணிக்கை.. திருப்பதி கோவிலில் சாதனை..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:03 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாத பக்தர்கள் எண்ணிக்கை மற்றும் உண்டியல் காணிக்கை குறித்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 22.22 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் பக்தர்கள் காணிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூபாய் 120.05 கோடி உண்டியல் வசூலாகியுள்ளதாகவும் தெரிகிறது. 
 
9.07 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும்  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.59 கோடி லட்டுக்கள் விற்பனை ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments