Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் அலுவலகம் முன் குவிந்த ராணுவம்.. டெல்லியில் பரபரப்பு..!

Mahendran
புதன், 16 ஏப்ரல் 2025 (10:32 IST)
டெல்லி நகரில் உள்ள காங்கிரஸ்  தலைமை அலுவலகத்துக்கு வெளியே துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதை எதிர்த்து நாடு முழுவதும் கவனயீர்ப்பு போராட்டங்கள் காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் துணை ராணுவ படைகள் காங்கிரஸ் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளது.
 
‘நேஷனல் ஹெரால்ட்’ வழக்கை மையமாகக் கொண்டு, ரூ.988 கோடிக்கும் மேற்பட்ட பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது. இதற்காக, எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.  
 
இந்நிலையில், மத்திய அரசின் போக்கை கண்டித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் அமலாக்கத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு, மாவட்ட அளவில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்தப்பட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியின் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வெளியே, நூற்றுக்கணக்கான மத்திய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜி உள்பட 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் அமளி..!

அமெரிக்காவின் Boeing விமானங்களுக்கு தடை! சீண்டி பார்க்கும் சீனா! அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

திருப்பதி கோவில் மீது ட்ரோன் பறக்கவிட்ட யூடியூபர்.. கைது செய்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments