Publish Date: Tue, 27 Dec 2022 (19:49 IST)
Updated Date: Tue, 27 Dec 2022 (19:51 IST)
திருப்பதியில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது
ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு, ஜனவரி இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதேசி ஆகியவை காரணமாக திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை அனைத்து பக்தர்களும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.