Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதி பிரசாத லட்டு... ஆன்லைனில் புக் செய்து பெற்றுக் கொள்ளலாம் ! பாதி விலை குறைப்பு

திருப்பதி பிரசாத லட்டு... ஆன்லைனில் புக் செய்து பெற்றுக் கொள்ளலாம் ! பாதி விலை குறைப்பு
, புதன், 27 மே 2020 (22:40 IST)
கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் கோயிலில் உள்ள பிரசாத லட்டின் விலையை ரூ.50லிருந்து ரூ. 25 க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி கூறியிருந்ததாவது :

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரங்கால் ஏழுமலையான் கோவிலில் மக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு தரிசமம் கிடைக்காத நிலையில்  பிரசாதத்தை மக்களுக்கு அளிக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதனால், ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை ரூ. 50 லிருந்து ரூ.25 ஆக பாதியாக குறைந்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு

செய்துள்ளது.விருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கிச் சென்ரு பக்தர்களுகு அளிக்கலாம் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் வரும் திங்கட்கிழமை முதல் பிரசாத லட்டு விற்பனை வருகிறது. முதல் நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.  ஆன்லைனில் புக் செய்து அருகில் உள்ள தேவஸ்தான் மண்டபங்களில் வாங்கலாம் என தெரிவித்துள்ளது;

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெட்டுக்கிளிகள் அதிகம் படையெடுத்து வந்தது ஏன் ? மத்திய அரசு விளக்கம்!