Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி விஐபி கட்டண உயர்வு – தேவஸ்தான கமிட்டியின் மாஸ்டர் பிளான் !

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (09:02 IST)
திருப்பதியில் விஐபி கட்டணத்தை 20,000 ரூபாயாக உயர்த்த திருப்பதி தேவஸ்தான் கமிட்டி முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை விஐபிகள் ரூ 500 கட்டணத்தில் எல்1, எல்2, எல்3 ஆகிய 3 பிரிவுகளில் அனுப்பப்பட்டு வந்தனர். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 

இதனால் இந்த 3 விதமான விஐபி கட்டண முறை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விஐபி டிக்கெட் விலையை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த டிக்கெட் வாங்குபவர்கள் ஏழுமலையானுக்கு மிக அருகில் அதாவது குலசேகர ஆழ்வார்படி வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மேலும் பல ஏழுமலையான் கோவில்களைக் கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு நிதி திரட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments