Publish Date: Tue, 07 Nov 2017 (09:15 IST)
Updated Date: Tue, 07 Nov 2017 (09:03 IST)
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று கூறப்படும் 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட பலர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 2ஜி வழக்கின் விசாரணை கடந்த சில வருடங்களாக டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்து இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு தேதியை அறிவிக்கின்றார்
நேற்று பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி ஆகியோர்களை சந்தித்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.