Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல்முறையாக 3 விமான நிலையங்களை இணைக்கும் ரயில்.. 2027ல் முடிக்க திட்டம்..!

Mahendran
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:05 IST)
தலைநகர் டெல்லியில் மூன்று விமான நிலையங்கள் இருக்கும் நிலையை கருத்தில் கொண்டு, இந்த மூன்று விமான நிலையங்களையும் இணைக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி விமான நிலையங்களை இணைக்கும் இந்த ரயில் சேவையின் பணிகள் 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இந்த பணிகள் நிறைவு பெற்றால் பயணிகள் மூன்று விமான நிலையங்களுக்கும் எளிதாக சென்று திரும்ப முடியும் என கூறப்படுகிறது.

டெல்லியின் மூன்று விமான நிலையங்களையும் இணைக்கும் ரயில் சேவையை தொடங்குவதற்கு டெண்டர்கள் கோரப்பட்டு உள்ளதாகவும், இது மூன்று விமான நிலையங்கள் மட்டுமன்றி ஏரோ சிட்டி  மற்றும் கார்கோ சிட்டி பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரயில் சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணி நிறைவு பெறும் என்றும், மூன்று விமான நிலையங்களையும் இணைத்தால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments