Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோர உணவகத்தில் லாரி நுழைந்து விபத்து -10 பேர் பலி, 20 பேர் படுகாயம்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (20:30 IST)
மஹாராஷ்டிர    மாநிலம் மும்பை – ஆக்ரா இடையே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலலையில் இன்று டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர உணவகத்தில் நுழைந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்தக் கோர விபத்து பற்றி காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  

மத்திய பிரதேசத்தில் இருந்து துலே நோக்கி இந்த டிரக் சென்று கொண்டிருக்கும்போது, டிரக்கின் பிரேக் செயலிழந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒய்ரரண்டு மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும்  இன்னொரு லாரியின் மீது மோதியதுடன்   உணவகத்தில் நுழைந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும்,  இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments