Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது: குமாரசாமியின் ஆட்சி கவிழுமா? நீடிக்குமா?

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (19:37 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் சிலர் ராஜினாமா செய்ததால் பெரும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னுடைய பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரியதை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் நடத்த வேண்டும் என்று கடந்த வாரமே சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
 
ஆனால் ஒருசில அமளிதுமளி மற்றும் பிரச்சனைகளால் நேற்றுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனையடுத்து இன்று மாலைக்குள் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் இன்று மதியம் தொடங்கியது. இந்த விவாதம் சற்றுமுன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது
 
சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், வாக்கெடுப்புக்கான மணி அடிக்கப்பட்டு அவையின் கதவு மூடப்பட்டு, வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஒருசில நிமிடங்களில் வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளை பொறுத்தே குமாரசாமியின் அரசு நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments