Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படகு கவிழ்ந்து 28 பேர் மரணம் - உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (09:50 IST)
உத்திரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்ததால் மொத்தம் 28 பேர் பலியாகியுள்ளனர். 


 

 
உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் இருந்து அரியானா மாநிலத்திற்கு நேற்று ஒரு படகு சென்றது. அதில், 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.  அந்த படகு 20 கி.மீட்ட தூரத்தில் கதா என்கிற கிராமத்திற்கு அருகே யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, பாரம் தாங்காமல் திடீரென கவிழ்ந்தது. 
 
இதனால், அந்த படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மீட்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 15 பேரை உயிரோடு மீட்டனர். ஆனால், 28 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு, 17 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்தை, உத்தரபிரதேச அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments