Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதறி அழுத முதியவருக்கு கை கொடுத்த நெட்டிசன்கள்! – ட்ரெண்டான பாபா தாபா கடை!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (14:21 IST)
டெல்லியில் நீண்ட ஆண்டுகளாக சிற்றுண்டி உணவகம் நடத்தி வரும் முதிய தம்பதிகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர்களது கடையில் கூட்டம் அதிகரித்துள்ளது.

டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் நீண்ட காலமாக தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனர். சமீப மாதங்களாக அவர்களது சிற்றுண்டி கடைக்கு வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்துள்ளது. நாளுக்கு நாள் யாருமே வராத சூழல் ஏற்பட, பலருக்கு உணவளித்த அவர்கள் உணவுக்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிற்றுண்டி கடை நடத்திய முதியவர் கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

வைரலான இந்த வீடியோவை பார்த்த நடிகை சோனம் கபூர், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோர் முதியவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். இந்நிலையில் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடைக்கு ஆதரவு அளிக்க கோரி இணையத்தில் பாபா கா தாபா என்ற ஹேஷ்டேக் வைரலானது. அதை தொடர்ந்து சுற்றிலும் உள்ள டெல்லி வாசிகள் பலர் முதிய தம்பதியின் சிற்றுண்டி கடையில் உணவருந்த குவிந்துள்ளனர். பிரபலங்கள் பலரும் பாபா கா தாபாவில் வந்து சாப்பிடுவதுடன் அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments