Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் எதிரொலி; இந்திய பங்குசந்தை வீழ்ச்சி! கச்சா எண்ணெய் உயர்வு!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:47 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குசந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் ஒடேசா உள்ளிட்ட நகரங்களுக்குள் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் போர் எதிரொலியாக இந்திய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. போர் அறிவிப்பு வெளியானவுடன் சென்செக்ஸ் 1409 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 55,822 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்து ஒரு பேரல் 100 டாலருக்கும் அதிகமாக விற்பனையாக தொடங்கியுள்ளது. இந்த போர் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

அடுத்த கட்டுரையில்
Show comments