Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூல் ராஜா பாணியில் டாக்டர்கள் ஆள்மாறாட்டம் செய்த நீட் தேர்வு! – அம்பலமான உண்மைகள்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (08:50 IST)
உத்தரபிரதேசத்தில்  நீட் நுழைவு தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக மருத்துவர்களே ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் ராஜா படத்தில் மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் ரௌடி ஹீரோ அங்குள்ள மருத்துவர் ஒருவரையே ஆள்மாறாட்டம் செய்து தேர்வுக்கு அனுப்புவார். அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் உண்மையாக நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த சகில் சோன்கர் என்ற மாணவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளார். டெல்லியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் எழுத விண்ணப்பித்திருந்த அவருக்கு பதிலாக எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் ஒருவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல அனுப் படேல் என்ற மாணவருக்கும் ஒரு டாக்டர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை கைடு செய்துள்ள போலீசார், 15 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments