Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து இழுத்த விவகாரம்! – மன்னிப்பு கேட்ட உ.பி போலீஸ்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (08:18 IST)
உத்தர பிரதேசத்தில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு உத்தர பிரதேச போலீஸ் மன்னிப்பு கோரியுள்ளனர்.

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணின் பெற்றோரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் உத்தர பிரதேசம் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.

பின்னர் மீண்டும் அவர்கள் உத்தர பிரதேசம் சென்றபோது போலீஸார் உள்ளே செல்ல அனுமதித்தனர். முன்னதாக உ.பி உள்ளே செல்ல முயன்றபோது ஏற்பட்ட அமளியில் உ.பி போலீஸார் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த செயலுக்காக உத்தர பிரதேச போலீஸ் பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கோரியுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக தாங்கள் பணி புரிவதாகவும், இதுகுறித்து விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்