Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி காற்று மாசுக்கு குரல் கொடுத்த கோலி

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (20:49 IST)
டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுவாசிக்கவே முடியாத மக்கள் வீட்டிலே முடங்கி உள்ளனர். 
 
காற்று மாசுபடுவதற்கு போக்குவரத்து அதிகரிப்பு ஒரு காரணியாக உள்ளதால், மக்கள் தனியார் போக்குவரத்தை விடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
 
டெல்லியின் நிலை நமக்கு நிச்சயம் தெரியும். நிறையப்பேர் இது ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விவாதித்து மட்டும் வருகிறார்கள். மாசுபாட்டிற்கு எதிரான இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் ஒன்று சேர்ந்து விளையாடினால் மட்டுமே முடியும். டெல்லியில் நிலவி வரும் மாசுபாட்டை குறைப்பது நமது கடமை. 
 
மக்கள் இந்த நேரத்தில் பொது போக்குவரத்தை உபயோகப்படுத்த வேண்டும். பேருந்து மெட்ரோ, ஓலா ஷேர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். நமது சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments