Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம், கல்வி! – கிரிக்கெட் வீரர் சேவாக்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (08:34 IST)
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம், இலவச கல்வி வழங்க உள்ளதாக கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவித்துள்ளார்.



ஒடிசாவில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தில் 275 பேர் பலியான நிலையில் 900க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகத் தலைவர்களும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவ பல அமைப்புகளும் முன் வந்துள்ளன. இந்த ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

அதேபோல பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் இந்த ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் தங்குமிடம் மற்றும் கல்வியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய சேவாக் சர்வதேச பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதியும், இலவச கல்வியும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments