Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று பிரதமரை சந்தித்த மம்தா பானர்ஜி!

mamtha
Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:59 IST)
நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏற்கனவே நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு  ஆதரவு இல்லை என  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் நாளை துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
 
மேலும் நாளை நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்திலும் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments