Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தர்! – மேற்கு வங்க அரசு முடிவு!

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:59 IST)
மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தர் பதவியை ஏற்பதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கு வங்க அரசு கொண்டு வர உள்ளது.

மாநில பல்கலைகழகங்களில் செயல்பாடுகளில் ஆளுனருக்கு உள்ள அதிகாரம் குறித்து கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகளும், விவாதங்களும் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் பல்கலைகழக விவகாரங்களில் ஆளுனரின் முடிவுகள் பிரச்சினையை ஏற்படுத்துவதாக தமிழக அரசு கண்டனம் தெரிவித்து வந்தது.

இதனால் பல்கலைகழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்ததையும் தமிழக அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில் இதுபோன்று தற்போது மேற்கு வங்கத்தில் மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தராக இருக்கும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில அமைச்சர் ப்ரத்யா பாசு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments