Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு !

Webdunia
புதன், 26 மே 2021 (12:23 IST)
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த புதிய டிஜிட்டல் கொள்கையை எதிர்த்து வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 
 
ஆம், இந்திய அரசின் டிஜிட்டல் கொள்கையால் வாட்ஸ் ஆப் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு பறிபோகும் என இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதோடு, தனியுரிமை ரகசியம் காக்கப்பட வேண்டும் எனற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் இந்த வழக்கை வாட்ஸ் ஆப் தொடர்ந்துள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் விதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments