கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

Siva
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (14:08 IST)
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியில், குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி தனது கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமேதி பகுதியைச் சேர்ந்த அன்சார் அஹமது என்பவருக்கு சபேஜூல் மற்றும் நஸ்னின் என இரண்டு மனைவிகள் உள்ளனர். இருவருக்கும் குழந்தை இல்லை. முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால், அஹமது இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் இரண்டாவது மனைவி நஸ்னினுக்கும் குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
சம்பவம் நடந்த நேற்றிரவு, அஹமதுக்கும் நஸ்னினுக்கும் இடையே குழந்தை இல்லாதது குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நஸ்னின், கத்தியை எடுத்து அஹமதுவின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அஹமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக நஸ்னினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments