Webdunia - Bharat's app for daily news and videos

Install App

WHO-வின் வல்லுநர் குழு ஆலோசனை: அனுமதி கிடைக்குமா கோவாக்சினுக்கு?

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (13:25 IST)
கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவரசகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கும் என எதிர்ப்பார்ப்பு. 
 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இதனிடையே மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி அளித்திருந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.  
 
இந்நிலையில் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவரசகால பயன்பாட்டுக்கான முறையான அனுமதியை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், இன்று உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இதில் உலக சுகாதார அமைப்பின் அவசர கால அனுமதி கோவாக்சின் தடுப்பூசிக்கு மிகவும் முக்கியமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலையீட்டால் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சந்திக்கும் புதிய சவால்

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா தவெக மாநாடு? முதல் கோணல் முற்றும் கோணல்?

மாட்டிறைச்சி சமைத்ததால் 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்களா? பரபரப்பு தகவல்..!

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments