Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்கால கூட்டத் தொடரில் ராகுல்காந்தி பங்கேற்பாரா? காங்கிரஸ் தகவல்

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (18:34 IST)
காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாத யாத்திரை செய்து வருகிறார்.

 
சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில்  நிறைவு செய்யவுள்ளார்.

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இதில், ராகுல்காந்தி கலந்துகொள்வாரா என கட்சி வட்டாரங்களில் கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, இன்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாவது: பாரத் ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தி மேற்கொண்டு வருவட்க்ஹால், அவரால்  பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments