Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை தெருவில் இழுத்துப் போட்டு சாத்தும் மருமகள் –வைரலான வீடியோ!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (10:34 IST)
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே தகராறு எழுந்ததில் சாலையில் நின்று அடித்துக் கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளது.

ஹைதராபாத்தின் மல்லேபள்ளி பகுதியில் உஜ்மா என்ற பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் சவுதியில் வேலையில் இருக்கிறார். இதனால் உஜ்மா தனது மாமியார் தனிஷ்காவுடன் வசித்து வருகிறார். ஆனால் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே சுமூகமான உறவு இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மருமகள் உஜ்மாவின் அம்மா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் வழக்கம் போல மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழ, ஒரு கட்டத்தில் கோபமான உஜ்மா மாமியாரை தரதரவென வீட்டை விட்டு இழுத்து வந்து சாலையில் வைத்து அடித்துள்ளார்.  இது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments