Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 ஆண்டுக்கு பின் முதல்முறையாக தாஜ்மஹாலை தொட்ட யமுனா நதி.. கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..!

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (12:03 IST)
45 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தாஜ்மஹாலின் வெளிப்புற சுவரை யமுனா நதி நீர் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் யமுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
யமுனா நதியில் அதிக அளவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக யமுனா நதியில் உள்ள தண்ணீர் தாஜ் மஹாலின் வெளிப்புற சுவரை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இருப்பினும் தாஜ்மஹால் உள்ளே தண்ணீர் வர வாய்ப்பு இல்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments