Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடையூறு பண்ணுனா இறுதி ஊர்வலம்தான்! – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (12:13 IST)
சமீபத்தில் திருமணத்திற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் நீதிமன்றம் கூறிய நிலையில் லவ் ஜிகாதிற்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக முதல் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து ஆணை மணப்பதற்காக ஒரு மாதம் முன்னதாக மதம் மாறியுள்ளார். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி பேசியுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் “மாநிலத்தில் இந்து பெண்களை பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடுமையான சட்டம் விரைவில் இயற்றப்படும். எங்கள் சகோதரிகளின் மாண்பையும், பெருமையும் குலைக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் பெண்களுக்கு இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments