Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தையும் குணமாக்கும் கற்றாழை !!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (06:38 IST)
சிறிதளவு கற்றாழை ஜெல்லை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிறு, குடல்கள் போன்ற ஜீரண உறுப்புகளை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.


கருவளையங்களைப் போக்க நினைப்பவர்கள் தினமும் இரவு படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, மறுநாள் காலையில் கழுவி வந்தால், விரைவில் கருவளையங்கள் மறையும்.

கற்றாழையில் வைட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லானது சருமத்தில் கொலாஜன் செல் உற்பத்தியை அதிகரிக்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து அதில் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் இளமை தோற்றத்துடன் காணப்படும்.

கற்றாழை ஜெல்லை கருமையாக இருக்கும் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் குறைந்துவிடும்.

கற்றாழை ஜெல்லை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments