Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைக்கீரையை தொடர்ந்து உண்டு வருவதால் கிடைக்கும் பலன்கள் !!

அரைக்கீரை
Webdunia
அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும்.அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது.

அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும்  இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது. இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது.
 
இந்த கீரையை தொடர்ந்து, உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நூரையீரல் நோய்கள் நீங்கும். வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசெய்யும்.  நரம்புகளை வலுப்படுத்தும்.
 
அரைக்கீரையோடு பூண்டு, மிளகு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்து கடைந்து சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கீரையை சேர்த்து வரலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சீரான வளர்ச்சி  அடையும். மூளை வளர்ச்சி உண்டாகும்.
 
இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து ரசம் செய்து சாப்பிடலாம். அரைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி புரதச்சத்து,  சுண்ணாம்பு சத்து, நார்ச் சத்து அதிக அளவில் உள்ளது.
 
இந்தக் கீரையோடு சுக்கு, மிளகு, வெங்காயம், பெருங்காயம், பூண்டு, நெய் சேர்த்து உணவாக சாப்பிட்டு வந்தால் வாத சம்பந்தப்பட்ட வியாதிகள் குணப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

ஏழைகளின் பாதாம் வேர்க்கடலை.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments