Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் காலையில் முளைக்கட்டிய கொள்ளு எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக  அவசியம்.

கொள்ளுத் தண்ணீர் இரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி  செய்வோருக்கும் மிகவும் உகந்தது. 
 
பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்சனைக்கு, இருமல் மற்றும் சளியை  விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த என பல்வேறு பிரச்சனைகளை கொள்ளு நிவர்த்தி செய்கிறது.
 
தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப்  அருந்துவதால் மேற்கூறிய செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
 
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம்  சொல்கிறது. 
 
சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேகவைத்த தண்ணீரில் சூப் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு  கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். மட்டுமின்றி, கொள்ளை வேகவைத்து மசித்து, சருமப் பிரச்சனைகளுக்குத் தடவுகிறார்கள்.
 
கொள்ளு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கின்றன. இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் இழந்த சத்துக்களை ஈடு செய்கிறது. மாதவிடாய் ஏற்படும் போது உண்டாகும் அதிக எரிச்சல் மற்றும் வலியையும் குறைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமான தகவல்..!

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்..!

இதய நோயாளிகள் எடுக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments