Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் கடுக்காய் !!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (18:08 IST)
கடுக்காயில் மலமிளக்கிய பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.


பல் துலக்கிய பின், பற்களையும், ஈறுகளையும் கடுக்காய் தூள் கொண்டு மசாஜ் செய்து, நன்றாக மசாஜ் செய்த பின் ஒரு நிமிடம் கழித்து வாய் கொப்புளித்து வர பல் சார்ந்த பிரச்சனைகள் வராது.

கடுக்காய் பசியைத் தூண்டும். செரிமானதை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க கடுக்காய் உதவுகிறது.

10 கிராம் கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை கொதிக்கவைத்து தாங்கக்கூடிய வெப்பநிலைக்கு வந்ததும், குடிக்க வேண்டும். தொண்டை புண் குணமாகும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

கடுக்காய் சருமத்தை சுத்தப்படுத்தும். இது உடலின் நச்சுகளை அகற்றும் என்பதால், கடுக்காய்பொடியை உட்கொள்வதால் சருமத்தை சுத்தப்படுத்தும். உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என்பதால் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!

அடுத்த கட்டுரையில்
Show comments