செரிமான பிரச்சனைகளை நீக்கி குணப்படுத்தும் குதிரைவாலி அரிசி !!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (14:15 IST)
குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.


குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை வளமான அளவில் உள்ளது. கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட ஆறு மடங்கு நார்ச்சத்து குதிரைவாலி அரிசியில் உள்ளது. மேலும் கால்சியம், பீட்டா கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களையும் உள்ளடக்கியது.

இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க நினைப்பவர்கள் குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். ஏனெனில் இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

குதிரைவாலி அரிசி சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் குதிரைவாலி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்க உதவுகிறது.

குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் சத்து வளமான அளவில் இருப்பதால் கண் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments