Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருதாணி பூக்களின் மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.


இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் நாள்பட்ட தலைவலி நீங்கும். கூந்தல் செழிப்பாகும். தலைவழுக்கையும் மறையும்.
 
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக்கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும்.
 
இதனால் உடல் வெப்பமும் தணியும். மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.
 
கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெய்யில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும். 
 
சரும வியாதிகளுக்கு காலில் தோன்றக்கூடிய தேமல் மற்றும் கரப்பான் புண்களுக்கு மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். எக்ஸிமா என்னும் சரும நோய்க்கும் மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!

கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments