Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை பொலிவுற செய்யும் பழங்களும் அதன் பலன்களும்...!

Webdunia
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தாலே சருமம் பொலிவடையும். ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் கொலாஜன்கள் சரும செல்களை புத்துணர்ச்சி தந்து, செல்களின் அமைப்பை பாதுகாத்து, வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தை  தக்கவைக்கிறது.
பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. பப்பாளியில் இருக்கும் பாப்பெயின் எனும் என்சைம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சரும  நோய்கள் வருவதைத் தடுக்கிறது. பாப்பாளியை சாறு எடுத்து முகத்தில் தடவிவந்தால், முகம் பொலிவாகும்.
 
வாழப்பழம் எளிதில் கிடக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் நிறைந்திருப்பதால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசை வலி,  வெடிப்புகளைத் தடுக்கும். வாழைப்பழத்தை மசித்து வாரம் ஒருநாள் ஃபேஷியல் செய்தால், தோல் சுருக்கங்கள் நீங்கும்.
 
எலுமிச்சைப்பழம் சாற்றை முகத்தில் பூசி மசாஜ் செய்தால், இதில் உள்ள சிட்ரிக் அமிலம், முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை நீக்கும். அழுக்குகளை வெளியேற்றும். எலுமிச்சையுடன் தேன் சேர்த்து மசாஜ் செய்தால், தோல் மிருதுவாகும்.
 
வெள்ளரியில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா நிறைவாக உள்ளன. வெள்ளரித் துண்டுகளை வெட்டி கண்மேல் வைத்து 20 நிமிடங்கள் கழிந்த பின்,  வெள்ளைத் துணியை நீரில் நனைத்து முகத்தைத் துடைக்க கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் போகும். வெள்ளரி ஜூஸ் இளமைத் தோற்றத்துக்கு உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments