Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிழ் தும்பை இலைகளை பயன்படுத்தி நோய்களுக்கு தீர்வு !!

கவிழ்தும்பை
Webdunia
கவிழ்தும்பை இலை குருவையரிசி சம அளவு இடித்து மாவாக்கிப் பனைவெல்லம் கலந்து 10 கிராம் அளவாகக் காலை, மாலை 3 நாள் சாப்பிட பெரும்பாடு தீரும்.
கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும்.  வீக்கம் வற்றும். 
 
நம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை.
 
முதலில் அரைப்படி அளவு கருங்குருவை அரிசியை எடுத்து தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவைக்க வேண்டும். கவிழ்தும்பை இலையை ஒரு கைப்பிடி அளவு  எடுத்து ஊறவைத்து அரிசியுடன் சேர்த்து இடித்து சலித்து பொடி செய்து கொள்ளவேண்டும். பின் இந்த பொடியுடன் கருப்பட்டி சேர்த்து மறுபடியும் இடித்து  எலுமிச்சம் பழம் அளவு காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் வரை சாப்பிட்டு வர முதுகு வலியும், கூன் விழுந்த முதுகும் குணமடையும்.
 
பாஷாண வகையில் உள்ள ரசத்தை கட்டுப்படுத்துவதில் மிக்க வல்லமை வாய்ந்தது. இம்மூலிகையில் செம்புச்சத்து அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments