மட்டன் உருளைக் கிழங்கு போண்டா செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
கொத்து கறி - கால்  கிலோ
காய்ந்த மிளகாய் - 5 
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
தனியா - 3 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
பச்சை மிளகாய் 1
உருளைக் கிழங்கு - அரை கிலோ
நறுக்கிய வெங்காயம்  - 2
முட்டை - 2
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 
 
காய்ந்த மிளகாய், விட்டுபட்டை,கிராம்பு, சோம்பு, தனியா, சீரகம் இவற்றை வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும். கொத்துகறியில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி, சேர்த்து நன்கு வதக்கி அதில் உள்ள நீர் சுண்டியதும் இறக்கி வைக்கவும்.
 
கடாயில் நெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் போட்டு தாளித்து கறியையும் கொட்டி கிளறி அதனுடன் வேகவைத்து  உருளைகிழங்கு தேவையான அளவு உப்பு போட்டு நன்கு மசித்து சின்ன உருண்டைகளாக செய்யவும்.
 
ஒரு கிண்ணத்தில் முட்டைகளின் வெள்ளை கருவை மட்டும் தனியே எடுத்து அடித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை வெள்ளை கருவில் முக்கி, பொரித்து எடுத்தால் மட்டன் உருளைக்கிழங்கு போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments