Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மணி முதல் 4 மணி வரை வெளியே வரவேண்டாம் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (09:09 IST)
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்ப அலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை காலத்திற்கு முன்பே ஆரம்பித்த வெயில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் இப்போதும் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. அதிகமான வெப்பத்தால் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து செய்திக் குறிப்பில் ‘திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வேலூர் ஆகிய சில வட மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். அதனால் 11 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து சன் ஸ்ட்ரோக்கைத் தவிர்க்கவும்’ என அறிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments