Publish Date: Mon, 14 Jun 2021 (08:01 IST)
Updated Date: Mon, 14 Jun 2021 (08:25 IST)
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் கடந்த கல்வியாண்டில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த கல்வி ஆண்டிலும் பள்ளிகள் மூடப்பட்டும் தேர்வுகள் இன்றி தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய்யப்பட்டதால் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.