Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை' '- எம்பி., அன்புமணி ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (15:52 IST)
தமிழ்நாட்டில்  முதல்வர்  முக.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், ''பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை'' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தமிழ்நாட்டில் 29.11.2022-ஆம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது!

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.  ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில்  பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம்.. மத்திய அரசு அறிவிப்பு..!

தவறான தகவல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை: நெல்சன் மனைவி எச்சரிக்கை..!

விஜய் கட்சி கொடியில் இரு போர் யானைகள்..இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்..!

151 எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள்.! 16 பேர் மீது பாலியல் புகார்.! அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

நாளை கட்சி கொடி அறிமுகம் - விஜய்க்கு காங்கிரஸ் வாழ்த்து.! இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு இல்லை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments