Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக்: தினகரன் குறித்து ஜெயகுமார்

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (11:41 IST)
தினகரன் ஆதரவு எம்பிக்கள் மூன்று பேர் நேற்று ஒன்றிணைந்த அதிமுகவில் இணைந்தது குறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன், தன்னிடம் கூறிவிட்டே மூன்று எம்பிக்கள் எதிர்முகாமுக்கு சென்றதாக பேட்டி அளித்திருந்தார்.
 
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'என்னிடம் கூறிவிட்டே 3 எம்பிக்கள் அணி மாறினார் என டிடிவி தினகரன் கூறுவது 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக்' என்று கூறினார். மேலும் தினகரனின் கூடாரம் காலியாகி வருவதாகவும், விரைவில் அவர் பக்கமுள்ள அனைவரும் ஒன்றிணைந்த அதிமுகவுக்கு வருவார்கள் என்றும் கூறினார்.
 
மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்த தனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்றும் அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். நாளை நடைபெறும் ஆட்சிமன்ற குழுவினர் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று தான் நம்புவதாகவும் ஜெயகுமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments