Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலி: தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுனர் ஆர்.என்.ரவி

Webdunia
புதன், 17 மே 2023 (23:08 IST)
விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு  மாநில ஆளுனர் ஆர்.என்.ரவி  மாநில அரசிடம் இன்று  அறிக்கை மற்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த  13 ஆம் தேதி இரவு விஷச்சாராயம் விற்றதை வாங்கிக் குடித்த பலருக்கு உடஅல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில், 14 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை பகுதியில், கடந்த சனிக்கிழமை அன்று விஷச்சாராயம் குடித்த 8 பேர் பலியாகினர். இந்த விஷச்சாரயம் குடித்து மொத்தம் 22 பேர் பலியான  நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாராய வியாபாரிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்., இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு  மாநில ஆளுனர் ஆர்.என்.ரவி  மாநில அரசிடம் இன்று  அறிக்கை மற்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments