Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.சியில் மின்கசிவு - சென்னையில் தாய், தந்தை, மகன் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (11:26 IST)
சென்னை கோயம்பேட்டில் ஏ.சியில் ஏற்பட்ட மின்கசிவால் தாய், தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரவணன். இவருக்கு கலையரசி என்ற மனைவியும், 8 வயதில் கார்த்திகேயன் என்ற மகனும் இருந்தனர்.
 
இந்நிலையில் நேற்றிரவு கார்த்திகேயன் ஏசி போட்டுவிட்டு தனது குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். நடுஇரவில் கரண்ட் கட் ஆனதால் ஏ.சி, இன்வெர்டலில் ஓடியுள்ளது.
 
சற்றி நேரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் ஏ.சியில் இருந்து கரும்புகை வெளியாகி உள்ளது. இதனால் தாய், தந்தை, மகன் ஆகியோர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏ,சியை பயன்படுத்துவோர் அதனை கவனமாக கையாள வேண்டும் என ஏ.சி டெக்னீஸியன்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments