Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எத்தனை பேர்?

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (18:50 IST)
தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் 39 தொகுதிகளில் மொத்தம் 935வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 820 பேர் ஆண்கள் மற்றும் 113 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் திருநங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிகபட்சமாக தென்சென்னையில் 39 ஆண்களும், 8 பெண்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 48 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தென்சென்னையை அடுத்து திருவண்ணாமலையில் 38 வேட்பாளர்களும், பொள்ளாச்சியில் 37 வேட்பாளர்களும், திருவண்ணாமலையில் 36 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.,
 
குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என ஆறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நீலகிரியை அடுத்து தென்காசியில் 9 வேட்பாளர்களும், பெரம்பலூரில் 13 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
 
இவர்களில் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கபடும் எத்தனை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது நாளை நடைபெறும் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னரே தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments